கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

194 0

மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

கூடலூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தனர். மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். இருந்தபோதும் அவர் எங்கே உள்ளார்? என்ற விபரமே தெரியவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமானார். அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் அதன் பிறகு ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். பின்னர் மாரியம்மாளின் மகன்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்றனர். அவர்களை அடையாளம் கண்ட மாரியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார். டி.எஸ்.பி. மது பாபு, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் செபாஸ்டின் ஆகியோர் முறைப்படி அவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மாரியம்மாள் தெரிவிக்கையில், இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

Related Post

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா…. அப்போ நீங்க செலக்ட்

Posted by - September 13, 2023 0
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6…

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - November 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *