கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

211 0

மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

கூடலூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தனர். மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். இருந்தபோதும் அவர் எங்கே உள்ளார்? என்ற விபரமே தெரியவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமானார். அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் அதன் பிறகு ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். பின்னர் மாரியம்மாளின் மகன்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்றனர். அவர்களை அடையாளம் கண்ட மாரியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார். டி.எஸ்.பி. மது பாபு, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் செபாஸ்டின் ஆகியோர் முறைப்படி அவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மாரியம்மாள் தெரிவிக்கையில், இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

Related Post

போராட்ட களத்தில் கலைஞரின் ”பராசக்தி” வசனம்.. தமிழக முதல்வரின் கவனத்தை பெற்ற போராட்டம் . … அடுத்தது என்ன?

Posted by - December 29, 2022 0
  ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி… ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்? பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள், பலர் இறந்தும் விட்டார்கள்……

”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Posted by - January 31, 2025 0
பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர்…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

Posted by - December 27, 2024 0
“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.” தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *