கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

191 0

மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

கூடலூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தனர். மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். இருந்தபோதும் அவர் எங்கே உள்ளார்? என்ற விபரமே தெரியவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமானார். அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் அதன் பிறகு ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். பின்னர் மாரியம்மாளின் மகன்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்றனர். அவர்களை அடையாளம் கண்ட மாரியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார். டி.எஸ்.பி. மது பாபு, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் செபாஸ்டின் ஆகியோர் முறைப்படி அவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மாரியம்மாள் தெரிவிக்கையில், இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

Related Post

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - September 13, 2023 0
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின்…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - December 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

Posted by - April 28, 2025 0
அதிருப்தியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.5 லட்சம் வரை…

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - October 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *