மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

301 0

H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.

H3N2 Influenza Symptoms : டெல்லி, சென்னை போன்ற பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்க அதிகரித்துள்ளது. இது, H3N2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். H3N2 இன்ஃப்ளூயன்ஸா “ஹாங்காங் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது.

புது தில்லியில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா A வகை தொற்றுக்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது.

இதற்கு எப்படி சிகிச்சையளிப்பது?

H3N2 காய்ச்சல் ஏற்பட்டால், நன்றாக ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். அத்துடன், திரவ நிலையில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் மற்றும் உடல் வலியைக் குறைப்பதற்கு அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

 

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கடுமையான அதிகுறிகள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து எப்படி உங்களை பாதுகாப்பது?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றை தடுக்க, ஆண்டுதோறும் தவறாமல் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, மக்கள் கூட்டமான இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வெளியில் செல்லும் பொது மாஸ்க் போடுவது, அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

இது கொரோனா போன்று பரவக்கூடிய நோயா?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வேகமாக மற்றவர்களுக்கு பரவும். H3N2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவும். கொரோனாவை போல வைரஸால் மாசுபட்ட மேற்பரப்பைத் தொட்டபின்னர், கைகளை சுத்தம் செய்யாமல் ஒருவர் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே இதயம், சர்க்கரை மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

Related Post

வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க

Posted by - August 30, 2023 0
சென்னை: வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும். இந்த கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில்…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *