முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

153 0

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜனவரி 7) அன்று வெளியாகி இளம் தலைமுறையினர் முதல் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த காதல் கதை ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் கிருத்திகா கூறுகையில், ”காதலிக்க நேரமில்லை படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.  ட்ரைலர் வெளியிட்டுள்ளோம். ஏ.ஆர். இசையமைத்துள்ளார். நல்ல இருக்கும். எல்லாருக்கும் நன்றி. அப்போது காதலிக்க நேரமிருந்தது. இப்போ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் பயங்கர பிஸியாக இருக்கிறோம். காதலிக்க நேரமில்லை என படம் பெயர் வைத்தாலும் காதல் குறித்துதான் பேசியுள்ளோம். காதல் இல்லாமல் எதுவும் இல்லை. அது சந்தோஷத்தையும் கொடுக்குது, சின்ன கஷ்டத்தையும் கொடுக்குது என்று தான் படத்தில் பேசியுள்ளோம். நான் படம் எடுக்க டைம் எடுக்கிறது. கதையை யோசித்து அதை எடுத்து வெளியிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட டைம் தேவை படுகிறது. அதைத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து உதயநிதி அரசியல் வாழ்க்கையில் பிஸியாக உள்ளார். அவரைவைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கிருத்திகா, “ஏன் இப்படி? போலாமே, அது முடிந்து போன கதை. அதை இப்போ பேசிட்டு இருக்கீங்க. அவரை வைத்து படம் இயக்க வேண்டும் ஆசையெல்லாம் இல்லை” என தெரிவித்தார்.

Related Post

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Posted by - February 17, 2023 0
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில்…

கார்த்திகை தீபம்- திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ் …

Posted by - November 23, 2022 0
டிச.6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார்,…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

Posted by - March 25, 2025 0
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹுசைனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *