மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

362 0

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப் போவதாகவும், மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவேரி பிரச்சனை முழுவதும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும்.

எந்த ரூபத்திலும்  எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சமரசத்திலும் மேகதாது அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவது என்ற பேச்சு காவேரி நடுவர் மன்றத்தில் வரவில்லை. காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் இந்த பேச்சு வரவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Post

அவதியை ஏற்படுத்தப்போகும் அனல்காற்று: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Posted by - March 1, 2023 0
நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த இந்த…

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - January 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - August 14, 2023 0
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4)…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்: இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது

Posted by - December 20, 2023 0
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின்…

”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Posted by - January 31, 2025 0
பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *