வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

242 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் காட்பாடி, காந்தி நகரில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்த முயன்றனர்.

துரைமுருகனின் மகன் எம்.பி கதிர் ஆனந்தும் அமைச்சருடன் ஒன்றாக தங்கி இருப்பதால் அவரது அறைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர். அமைச்சர் துரை முருகன் மற்றும் எம்.பி. கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லை. வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அதனால் அதிகாரிகள் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.ஆளில்லாத வீட்டில் சோதனை எப்படி நடத்துவது என அவர்களுக்குள் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுகுறித்து கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்த், இங்கு உள்ள முக்கியமான கட்சி பிரமுகர்களுடன் போனில் பேசியதாகவும், உறவினர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி கொள்ள ஒத்துழைப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியானது.இதையடுத்து பூட்டப்பட்ட கதவை மதியம் 2 மணிக்கு மேல் திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கதிர் ஆனந்த் வீட்டிற்கு வெளியே குவிந்ததால் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் காலை 7 மணி முதலே சோதனை நடைபெற்றது. இரவுக்கு மேல் உள்ளே சில பூட்டப்பட்ட லாக்கர்களை உடைத்து சோதனை செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கல்லூரி வளாகத்திற்கு வங்கி அதிகாரிகள் அடங்கிய வாகனம் ஒன்று உள்ளே சென்றுள்ளது. உள்ளே பணம் கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். காட்பாடி அடுத்த நடுமோட்டூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் இருந்தே பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வந்தது. சீனிவாசன் வீட்டில் 4 மணியளவில் சோதனையை முடித்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் டிராவல் பேக்குகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.அந்த பையில் சுமார் 25 லட்சத்திற்கு மேல் ரொக்கப்பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே இரவு 7.30 மணியளவில் கதிர் ஆனந்த் வீட்டுக்குள் பணியாளர் ஒருவர் கடப்பாறையுடன் சென்றுள்ளார். உள்ளே கட்டையால் செய்யப்பட்ட பெட்டி மற்றும் திறக்க முடியாத பீரோவை உடைப்பதற்காக அதிகாரிகள் கடப்பாறையை எடுத்து வரச் சொன்னதாக அப்போது பணியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில், சில பெட்டிகள் உடைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே வருடம் பூஞ்சோலை சீனிவாசன் தொழிற்சாலையில் இருந்து வேட்பாளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தான் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களை சந்தித்து முடித்த பின், தலைமை செயலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்துள்ளார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காட்பாடி வீட்டில் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வீட்டில் யாரும் இல்லை. இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ? அதே அளவிற்கு தான் எனக்கும் தெரியும்” என்று கூறினார்.இந்த அதிரடி சோதனையால் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பெரும் பரபரப்பு நீடித்தது. இதையடுத்து, 25 பேர் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் அதிரடி சோதனையை முடித்துக் கொண்டு பணம் மற்றும், ஆவணங்களுடன் சென்றதாகத் தெரிகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து முழுமையான தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

Posted by - December 14, 2023 0
சென்னை: சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும் மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம்

Posted by - December 6, 2023 0
சென்னை: சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன. சென்னையில் பெய்த மழையானது,…

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

Posted by - November 30, 2023 0
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது.…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *