வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

157 0

சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன.

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை டிரான்பரன்சி இண்டெர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. நிபுணர்கள், வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டு பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 180 நாடுகளின் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 96வது இடத்தை பிடித்துள்ளது.

பூஜ்ஜியம் என்பது ஊழல் நிறைந்த நாடாகவும் 100 என்பது ஊழலற்ற நிர்வாகம் நிறைந்த நாடாகவும் குறிக்கும் வகையில் மதிப்பெண்கள் அளவிடப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்பெண் 38ஆக உள்ளது. 2023ல் 39ஆக பெற்றிருந்த நிலையில் தற்போது 38 மதிப்பெண்ணாக குறைந்துள்ளது. அப்போது தரவரிசை 93ஆக இருந்தது. 2022ல் இந்தியாவின் மதிப்பெண் 40 இருந்தது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை 121வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தை பிடித்துள்ளது. ஊழல் குறைந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும்.

இரண்டாவது இடத்தில் பின்லாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.

மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50 புள்ளிகளுக்குக் கீழே மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஊழல் உலகளவில் பில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான சவாலாகவே உள்ளது.

2024 CPI அறிக்கை, ஊழல் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பிரச்சினையாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 2012 முதல் 32 நாடுகள் ஊழலைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 148 நாடுகள் அதே நிலையில் தொடர்கின்றன.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் CPI அறிக்கையில், முன்னிலை வகிக்கிறது. இது சுத்தமான பொதுத்துறைக்கான அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பின்லாந்து (88) மற்றும் சிங்கப்பூர் (84) ஆகியவை தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் நியூசிலாந்து (83), லக்சம்பர்க் (81), நார்வே (81), சுவிட்சர்லாந்து (81), ஸ்வீடன் (80), நெதர்லாந்து (78) மற்றும் ஆஸ்திரேலியா (77) ஆகியவையும் முதல் 10 குறைந்த ஊழல் நிறைந்த நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

மறுமுனையில், தெற்கு சூடான் வெறும் 8 மதிப்பெண்களுடன் மிகவும் ஊழல் நிறைந்த நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன.

Related Post

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

Posted by - May 22, 2024 0
நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான…

பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்.

Posted by - April 5, 2023 0
கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன. வாஷிங்டன் : கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

Posted by - August 7, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *