வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

173 0

சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன.

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை டிரான்பரன்சி இண்டெர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. நிபுணர்கள், வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டு பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 180 நாடுகளின் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 96வது இடத்தை பிடித்துள்ளது.

பூஜ்ஜியம் என்பது ஊழல் நிறைந்த நாடாகவும் 100 என்பது ஊழலற்ற நிர்வாகம் நிறைந்த நாடாகவும் குறிக்கும் வகையில் மதிப்பெண்கள் அளவிடப்படுகிறது.

2024ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்பெண் 38ஆக உள்ளது. 2023ல் 39ஆக பெற்றிருந்த நிலையில் தற்போது 38 மதிப்பெண்ணாக குறைந்துள்ளது. அப்போது தரவரிசை 93ஆக இருந்தது. 2022ல் இந்தியாவின் மதிப்பெண் 40 இருந்தது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை 121வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தை பிடித்துள்ளது. ஊழல் குறைந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது டென்மார்க் ஆகும்.

இரண்டாவது இடத்தில் பின்லாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.

மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50 புள்ளிகளுக்குக் கீழே மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஊழல் உலகளவில் பில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான சவாலாகவே உள்ளது.

2024 CPI அறிக்கை, ஊழல் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பிரச்சினையாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 2012 முதல் 32 நாடுகள் ஊழலைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 148 நாடுகள் அதே நிலையில் தொடர்கின்றன.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, டென்மார்க் 90 மதிப்பெண்களுடன் CPI அறிக்கையில், முன்னிலை வகிக்கிறது. இது சுத்தமான பொதுத்துறைக்கான அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பின்லாந்து (88) மற்றும் சிங்கப்பூர் (84) ஆகியவை தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் நியூசிலாந்து (83), லக்சம்பர்க் (81), நார்வே (81), சுவிட்சர்லாந்து (81), ஸ்வீடன் (80), நெதர்லாந்து (78) மற்றும் ஆஸ்திரேலியா (77) ஆகியவையும் முதல் 10 குறைந்த ஊழல் நிறைந்த நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

மறுமுனையில், தெற்கு சூடான் வெறும் 8 மதிப்பெண்களுடன் மிகவும் ஊழல் நிறைந்த நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன.

Related Post

உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா

Posted by - May 27, 2025 0
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று…
war news

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

Posted by - February 27, 2026 0
ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

Posted by - October 24, 2023 0
பீஜிங்: அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி…

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு

Posted by - November 4, 2023 0
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *