Gemini Generated Image 5h9m255h9m255h9m

அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

187 0

வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போல வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் பொருளாதார ரீதியான வரவு, செலவுகளுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியமான அங்கமாக வங்கி உள்ளது. வங்கிச் சேவையை நாட்டில் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே ஆகும்.

அக்கவுண்டை மாற்றாமலே வங்கியை மாற்றலாம்:

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது, ஒரு வங்கியில் பயன்படுத்திய வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியே இந்த பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் ஆகும். பொதுவாக, ஒருவரின் வங்கிக்கணக்கு எண்ணுடன் மியூச்சுவல் பண்ட், சம்பளகணக்கு, கடன் தவணை போன்ற பல்வேறு முக்கியமான விவரங்கள் தொடர்பில் இருக்கும். இதனால், வங்கிக்கணக்கை மாற்றும்போது அனைத்து சேவைகளிலும் புதுப்பிக்கும் சூழல் உண்டாகும்.

பலன்கள் என்னென்ன?

ஆனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கியை மாற்றிக்கொண்டாலும் வங்கிக்கணக்கு எண் மாறாது. அனைத்து பேமெண்ட் மேண்டேட்களும் தானாகவே மாறிவிடும். மேலும், இஎம்ஐ முறையும் மாறாமல் புதிய வங்கியில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும். வங்கியின் சேவை பிடிக்காவில் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதி எளிதாக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர்பு வைப்பு கணக்கு எண் ஆகிய கணக்குகள் உள்ளது. பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கே பயன்படுத்துவார்கள்.

வர்த்தகம் செய்பவர்கள், வியாபாரிகள் நடப்புக்கணக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த கணக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ள இந்த செயல்முறையானது எந்த வங்கிக்கணக்கு பயனாளர்களுக்கு? என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கே இந்த சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

AI துறையில் பெருகும் வேலை வாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 14, 2024 0
இளைஞர்கள் மத்தியில் சேர்க்கை நுண்ணறிவு துறை அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்போது AI இன்ஜினியரிங் துறையில் சிறந்த வேலைகள் எவை மற்றும் அதில் எவ்வளவு சம்பளம்…

14 பேரில் யாரை திருமணம் செய்யலாம்?- விவாதத்தை ஏற்படுத்திய பட்டதாரி பெண்ணின் டுவிட்டர் பதிவு

Posted by - July 19, 2023 0
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி…

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்

Posted by - January 11, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும்…

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *