அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

194 0

தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முக்கியமான குற்றவாளி இருக்கிறார். அவரை காப்பாற்ற தனி அரசியல் நடக்கிறது என பிஜேபி அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஓடி ஒளிந்த கமல்

அதேபோல் தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால் அவரை தவிர தமிழ் திரை உலகில் இருந்து யாரும் வாய் திறக்கவில்லை.

பொதுவாக சமூக குற்றங்களுக்கு எதிராக கமல், சூர்யா, சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் குரல் கொடுப்பார்கள். அதிலும் கட்சி ஆரம்பித்த பிறகு ஆண்டவர் எல்லாவற்றிற்கும் கண்டனத்தை பதிவு செய்வார்.

ஆனால் இப்போது எந்த நடிகரும் இந்த சம்பவத்திற்கு எதிராக வாய் திறக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை பெரிதாக யோசிக்க தேவையில்லை.

எல்லாமே சுய லாபம் தான். ஒரு படம் நன்றாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்களை கூப்பிட்டு பாராட்டுபவர்கள் இப்படி ஒரு கொடூரத்திற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

இதை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். மக்களுடைய பணம் மட்டும் வேண்டும். ஆனால் மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டோம் என்பதில் என்ன நியாயம்.

அப்பொழுது எதற்காக உங்கள் படங்களை பார்க்க வேண்டும் என இணையவாசிகள் பொங்கி வருகின்றனர். மேலும் எப்போதும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தது விஜய் தான் என அவரின் தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Post

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்துவதால் உங்க உடலில் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - December 4, 2023 0
ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமான நாள்தான். அதனால், தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் சாப்பிடும் உணவோடு ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை வழக்கமாக வேண்டும். ஏனெனில், நீங்கள்…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Posted by - December 31, 2024 0
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது…

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *