Generated Image February 26 2026 12 55PM

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

113 0

அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர்

கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.

திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

பணியாளர்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை

தமிழ்நாடு முதலமைச்சர் பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்து பணிபுரிய அறிவுறுத்தினார்கள். அதனால் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மீண்டும் உடனடி நியமனம், பணி நீட்டிப்பு ஆணை வழங்குதல்.
  • ஜனவரி மாதத்திற்கான ஊதிய இழப்பை வழங்குதல்
  • நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்றி ஊதிய உயர்வு மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கல்.
  • அடிப்படை தேவைகளான ESI, EPF, மருத்துவ காப்பீடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல்.
  • பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பணிக்கொடை மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டுதல்.
  • கல்வித் தரத்தை பாதிக்கும் நடைமுறைகளை நிறுத்தல்
  • UGC விதிமுறைகளின்படி ஊதிய திருத்தம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

Related Post

aiadmk eps

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

Posted by - April 23, 2026 0
மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி,…
Gemini Generated Image l0si72l0si72l0si

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

“விஜய் ஒன்னும் MGR இல்ல!” ❌ 232 தொகுதியிலும் படுதோல்வி? வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பகீர்! 💥 #Viral #Politics #VijayTVK

Posted by - April 30, 2026 0
“2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தியின் இந்த…

கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

Posted by - December 8, 2025 0
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி…

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *