எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

129 0

தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன..

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த குற்றம், சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வந்த தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆகச்சிறந்த எதிர்க்கட்சியாகக் காத்திரத்துடன் செயல்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெனிக்ஸ் கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு திமுக பல்வேறு போராட்டங்களை அறிவித்து வந்தது. திமுகவுடன் சமூக ஆர்வலர்களும் திரை நடிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்

இந்த நிலையில், நாட்டின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த அதிர்ச்சி சற்றே குறையும் முன்பாகவே, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியானது. அது எப்படி? குற்றவாளி, அந்த சாருடனும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், அந்த சார் யார்? அமைச்சர்கள் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்று கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு விட்டதாக திமுக அரசு பதிலளித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டாமா?

எனினும் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்  நின்ற தமிழ் திரையுலகினர் இப்போது ஏன் அமைதி காக்கின்றனர் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. கமல்ஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருந்தார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்து, பிற கூட்டணிக் கட்சியினர் யாரும் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை.

அமைதிக்கு என்ன காரணம்?

திரையுலகினரின் அமைதிக்கு என்ன காரணம்? ஆளும் கட்சி திமுக என்பதாலா? அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற சொல்லப்படுவதாலா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் , மோகன் ஜி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

Posted by - April 13, 2023 0
சிவகிரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த…

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

போலி இமெயில் முகவரி அனுப்பி சேலம் இரும்பு வியாபாரியிடம் ரூ.71.93 லட்சம் மோசடி

Posted by - August 2, 2023 0
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம்…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *