ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட் (SIM Card Deactivate) செய்யப்பட இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ரூ.20 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே டீ-ஆக்டிவேட்டில் இருந்து காப்பாற்றும். இந்த ஏர்டெல் சிம் கார்டு விதிகள் (Airtel SIM Card Rules) என்ன சொல்கிறது? ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் இப்போது என்ன செய்யலாம்?இந்த விதிகள் புதிதாக வந்தது, கிடையாது. டிராய் (TRAI) என்று சொல்லப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது அமல்படுத்தி விதிகளையே இப்போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு விளக்கி இருக்கிறது. இது டெலிகாம்டாக் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.ஏர்டெல் கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டில் 90 நாட்களாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால், இந்த விதிகளின்படி அந்த சிம் கார்டு டீஆக்டிவேட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். அந்த 90 நாட்களுக்கு மேல் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த அவகாசத்துக்குள் நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில் உங்களது சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய ஏர்டெல் நிறுவனத்துக்கு உரிமை இருக்கிறது. அதன்பிறகு உங்களது மொபைல் நம்பரும் வேறொரு கஸ்டமர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழங்க முடியும். இதை தடுத்து வைக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது, ரூ.20 டாக்டைம் உங்களுக்கு சிம் கார்டில் இருந்தால், அந்த 90 நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.
Related Post
இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது
புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக…
8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…
ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
AIBE 19 Result 2025 Live Updates: How to check All India Bar Exam result when declared
AIBE 19 Result 2025 News Live Updates: The Bar Council of India has not yet released the AIBE 19 results…
8 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 7.830 ஆக உயர்ந்திருந்தது.…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (284)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!
