ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

325 0

அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும். அந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும். ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும். அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவு சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும் அஷ்டமச் சனி: ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சார சனி வருவது தான் அஷ்டமத்து சனி. அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி காலத்தில் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். வீண் பிரச்சினைகள் சிக்கி, பழி ஏற்க நேரும்.புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது ஆனால்உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். ஏழரை சனி 7 1/2 ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச் சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்து விடும். 3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.

Related Post

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ

Posted by - April 16, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து…

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் ராதிகா.?வனிதா நடிக்கவுள்ளதாக தகவல்கள்

Posted by - January 27, 2023 0
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா வேடத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகி, சர்ச்சைக்குரிய நடிகை வனிதா அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக வதந்திகள் பரவி…

சீலிங் Fan -ஐ சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கா.? இந்த ஈஸியான டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

Posted by - December 3, 2022 0
சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த வரிசையில் சீலிங்ஃபேனுக்கும் இடமுண்டு. இதற்கு காரணம் அதை…

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. சினிஉலகம் நடத்திய Voting Poll Result இதோ

Posted by - November 4, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போட்டியாளர்களின் யார் வெளியேறுவார் என்பதை கணிக்கும் விதமாக நமது சினிஉலகம் Website-ல் Voting Poll…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *