குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

136 0

தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து ,உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னை, போரூர் அருகே 2017ஆம் ஆண்டு அண்டை வீட்டு 6 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றத்தை உறுதி செய்ய முடியாத காரணத்தால், தஷ்வந்த்தின் தண்டனையை ரத்து செய்ததாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கியே சம்பவம்

சென்னை போரூர், அடுத்த மாங்காடு அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு, 6 வயது பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் பெயரை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு மறந்திருக்காது. தஷ்வந்த் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தக் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது.

இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம், தஷ்வந்த்துக்கு, 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில்தான் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் போதிய அளவில் தஷ்வந்துக்கு எதிராக இல்லை என்பதாலும் முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாயைக் கொலை செய்த வழக்கிலும் விடுதலை

இதற்கிடயே தஷ்வந்த், தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

Posted by - October 28, 2024 0
தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார். தமிழக…

கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

Posted by - November 23, 2022 0
மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *