‘சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்’ – டெவோன் கான்வே புகழாரம்

264 0

எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார்.

சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே புகழாரம் சூட்டியுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்று விடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்கவாட், ஷிவம் துபே, டெவோன் கான்வே உள்ளிட்ட வீரர்கள் திறமையாக விளையாடி வருவதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்பாக நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் டெவோன் கான்வே இந்த தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவர் தோனி குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும். கிரிக்கெட்டில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் எனக்கு ஆதரவாக இருப்பதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன்.

நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்படுவதற்கு தோனி உதவினார். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இப்போது டி20  போட்டிக்கு ஏற்றவாறு என்னை நான் மாற்றிக் கொண்டுள்ளேன். டி20யை பொருத்தளவில் அனைத்து பந்துகளையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனநிலைக்கு நான் மாறுவேன். இந்த விஷயத்தில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். ஆனாலும் த்ரில்லிங் அதிகம் இருப்பதால் டி20 போட்டிகளை அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Post

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 29, 2023 0
16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 16-ஆவது ஐபிஎல்…

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

தோல்வியில் இருந்து மீண்டு வருமா மஞ்சள் அணி? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted by - April 8, 2024 0
நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றி, அண்ணிய மண்ணில் அடுத்தடுத்து…

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *