சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

215 0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஸ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி ஆகியோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்தனர். ஜல்லிக்கட்டில் முக்கிய பிரமுகர்களின் வளர்ப்புக் காளைகளும் களமாடி வருகின்றன.

அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளில் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அலங்காநல்லூரிலும் களமிறங்கி வெற்றிபெற்றது. இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றிபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் காளை களமிறங்கிய நிலையில், யாருக்கும் பிடிகொடுக்காமல் வெற்றிபெற்றது.

நடிகர் சூரியின் சார்பில் 2 மாடுகள் களமிறங்கின. 3வது சுற்றில் களமிறங்கிய சூரியின் காளை பிடிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய காளை வெற்றிபெற்றது. 4 வது சுற்றில் களமிறங்கிய தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காளை வெற்றி பெற்றது. இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வெற்றிபெற்றது.

Related Post

விஜய்-சங்கீதா விவாகரத்து!

Posted by - February 27, 2026 0
நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு! “விஜய் நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக, அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted by - September 12, 2025 0
TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். TET…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

கறார் காட்டும் பசுமை தீர்ப்பாயம்.. நைசாக நழுவும் சிபிசிஎல்! எண்ணெய் கழிவு வழக்கு இன்று விசாரணை

Posted by - December 14, 2023 0
சென்னை: மிக்ஜாம் மழை வெள்ளத்தின் போது, வடசென்னையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறி கடலில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *