“சென்னையில் இளம் திறனாளர்கள் அதிகம்” – சென்னை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

349 0

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – பிரதமர் மோடி

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்

சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, ‘’வணக்கம் சென்னை என்று கூறி உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் உற்சாகமாக உணர்கிறேன். இளம் திறனாளர்களை அதிகமாக கொண்டுள்ளது சென்னை. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இருக்கும் உறவு மிகவும் பழமையானது. நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பழமையானது

நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது சிலருக்கு அச்சம்  ஏற்படுகிறது.  காரணம் என்ன தெரியுமா பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவது தான் என்றார்.

மூன்றாவது முறை எனது ஆட்சியில் இந்தியா உலகின் 3-ஆவது பெரும் பொருளாதாரமாக மாறும். சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தந்துள்ளோம். சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது

தமிழ்நாட்டை சிறப்பானதாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்.  சென்னைக்கு பல்லாயிரக்கணக்கான கோடியில் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுகதுக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை  என்றார்.

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பேசினார்.

கொரோனா பெருந்தொற்றின்போது அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. சிறு குறு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கினோம். மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக செல்வதை திமுக விரும்பவில்லை. திமுக-வுக்கு குடும்பம்தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படாமல் நான் தடுப்பேன்மக்களுக்கு நேரடியாக பலன்கள் செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு. திமுக கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு செலவு செய்யப்படும் என்பது மோடியின் உத்தரவாதம். திமுகவுக்கு அவர்கள் குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை, பாஜகவுக்கு மக்கள் மேல் அக்கறை என்றார்.

Related Post

திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? – விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

Posted by - December 7, 2024 0
சினிமாவில் கால் வைப்பது வேறு அரசியல் களத்தில் கால் வைப்பது வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…
eps cvs

CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!

Posted by - May 25, 2026 0
அதிமுக-வில் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சிலர் தாவி வரும் சூழலில், 3 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…
Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai: மகளிர்களுக்கு 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

Posted by - May 14, 2026 0
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த…

அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய் – திருமாவளவன் கருத்துக்கள்!”

Posted by - December 7, 2024 0
#vijay #tvk #bjp #vck #dmk #aiadmk #congress #thirumavalavan #thalapathyvijay  அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *