சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

285 0

தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன.

2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. மேலும் நெட் ரன் ரேட் குறைந்ததால் அதே 14 புள்ளிகளை பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.இந்நிலையில் சென்னை அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக தகவல்கள் வெளிவந்தன. விரைவில் தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. இந்த நிலையில் சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது- தோனி ஓய்வு பெறுகிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது குறித்து அவர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர் என்ன முடிவை அறிவித்தாலும் அதற்கு நாங்கள் மதிப்பு தருவோம். அவர் ஓய்வு பெறுவது குறித்து எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இருப்பினும் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். மற்றும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. என்று கூறியுள்ளார்.

Related Post

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

Posted by - July 23, 2025 0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.…

சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

Posted by - April 25, 2025 0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானத்தில்…

ஹாரி புரூக் அபார சதம்: பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்…

Posted by - April 15, 2023 0
ஹாரி புரூக் 55 பந்துகளில் சதமடித்து, இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *