சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

225 0

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணிக்காக விராட் கோலி, படிக்கல் ஆகியோரின் அபார அரைசதம் மற்றும் கடைசி கட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடியால் 205 ரன்களை எடுத்தது.

மிரட்டிய ஜெய்ஸ்வால்:

இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ அணி களமிறங்கியது. கடின இலக்கை நோக்கி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட சூர்யவன்ஷி நிதானம் காட்டினார். ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்ஸராக விளாச அவருக்கு மறுமுனையில் சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசி ஒத்துழைப்பு தந்தார்.

வெற்றியுடன் ரன்ரேட் ராஜஸ்தானுக்கு முக்கியம் என்பதால் இருவரும் இணைந்து ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விளாசினர்.  இந்த ஜோடியை புவனேஷ்வர் பிரித்தார். அவரது பந்தில் சூர்யவன்ஷி 12 பந்துகளில் 2 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து போல்டானார். இதையடுத்து, வந்த நிதிஷ் ராணா நிதானம் காட்ட அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் அரைசதம் அருகில் நெருங்கிய போது அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆட்டத்தை மாற்றிய குருணல்:

பின்னர், வந்த ரியான் பராக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ஆர்சிபியை அச்சுறுத்தினார். அப்போது 10வது ஓவரை வீச குருணல் பாண்ட்யாவை அழைத்தார் கேப்டன் ரஜத் படிதார். அவரது முயற்சிக்கு உடனடி பலன்கிடைத்தது. அவர் வீசிய முதல் பந்திலே கேப்டன் ரியான் பராக் அவுட்டானார். அவர் 10 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர், சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா ஜோடி மாறி, மாறி சுழல் தாக்குதல் நடத்தினர். மறுமுனையில் நிதானமாக ஆடி அதிரடிக்கு மாற முயற்சித்த நிதிஷ் ராணாவை குருணல் பாண்ட்யா அவுட்டாக்கினார். 22 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த ராணா அவுட்டானார்.

பயமுறுத்திய ஜோரல்:

கடைசி 6 ஓவர்களில் 66 ரன்கள் ராஜஸ்தானுக்கு தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. களத்தில் இருந்த துருவ் ஜோரல் – ஹெட்மயர் மீது அழுத்தம் விழுந்தது. இரு அணியினரும் வெற்றிக்காக முழு மூச்சில் ஆட முயற்சித்தனர். துருவ் ஜோரல் அதிரடி காட்டினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டதால் ஆர்சிபி-யின் வெற்றி வேகப்பந்துவீச்சாளர்கள் கையில் இருந்தது.

அப்போது ஆட்டத்தின் போக்கில் ஹேசில்வுட் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது பந்தில் ஹெட்மயர் அவுட்டானார். அவர் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்னில் அவுட்டானார். ஆனால், ஜோரல் மறுபக்கம் ராஜஸ்தானுக்காக போராடினார். புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசியதால் ஆட்டத்தில் மேலம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

ஆட்டத்தை மாற்றிய ஹேசில்வுட்:

19வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். மீண்டும் அவர் ஆர்சிபி அணிக்காக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதிரடி காட்டிய துருவ் ஜோரலை அவர் அவுட்டாக்கினார். அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் ஆர்ச்சர் அவுட்டானார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முடிவுக்கு வந்த சொந்த மண் சோகம்:

இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் ராஜஸ்தான் அணிக்குத் தேவைப்பட்டது. கடைசி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்திலே ராஜஸ்தானின் ஷுபம் துபே அவுட்டானார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் வர, 3வது பந்தில் ஒரு ரன்னுடன் ஹசரங்கா ரன் அவுட்டாக கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க ஆர்சிபி வெற்றி உறுதியானது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுக்க ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சொந்தமண்ணில் இதுவரை வெல்லவில்லை என்ற சோகத்திற்கு ஆர்சிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்திற்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது.

Related Post

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

Posted by - April 23, 2023 0
மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்,…

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

Posted by - July 23, 2025 0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.…

கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

Posted by - March 9, 2025 0
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை…

Posted by - May 28, 2023 0
ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *