நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கும்படி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட 23 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுகவில் உள்ள அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக ஐ.பெரியசாமி, கனிமொழி , பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோர் ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது தொடங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
Related Post
கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…
’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்- விசிக. திமுகவை மட்டுமே…
ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…
விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…
நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (288)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

- “சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

- அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
