நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்

176 0

இஸ்ரேலுடன் தற்போது வரை எந்தவித போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

”போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை”

அமெரிக்காவின் முயற்சியால் ஈரான் – இஸ்ரேல் இடையேயான 12 நாள் மோதல் முடிவுக்கு வருவதாகவும், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்த, போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என ஈரன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுமா? அல்லது தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் சொல்வது என்ன?

ஈரான் வெளியிறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளபடி: இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை நடத்தியது. இப்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும் ” ஏற்படவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய ராணூவம் ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால், அதுவரை எங்கள் ராணுவம் தீவிரமாக பதிலடி அளிக்கும்” என விளக்கமளித்துள்ளார். இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் சொல்வது என்ன?

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பாக கருத்து சொல்ல இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அல்லது அவரது அலுவலகம் சார்பிலும் கூட எந்தவித கருத்தும் பகிரப்படவில்லை. ஈரானின் மறுப்பும், இஸ்ரேலின் அமைதியும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதா? என்பதை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட நாடுகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Related Post

பஹல்காம் தாக்குதல்! இன்னும் ஏன் வாயை திறக்கல! பாக்.. பிரதமரை கிழித்த பாக் வீரர்கள்

Posted by - April 24, 2025 0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் ஜம்மு…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

Posted by - December 10, 2024 0
குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய…

பக்கா ஸ்கெட்ச்.. வணிக வளாகத்தில் வன்முறை, கோடிக்கணக்கில் கொள்ளை.. 50 பேர் கும்பல் வெறிச்செயல்

Posted by - August 15, 2023 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping…

“இந்தியா செய்யுறத பார்த்தாலே எரிச்சலாகுது” – ஒட்டுமொத்தமாக கடுப்பில் குதித்த அமெரிக்கா

Posted by - August 1, 2025 0
இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்…

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *