நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

127 0

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வதை முதலமைச்சர் தொடர்ந்து செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது தேவை மட்டுமல்ல, உத்திசார்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் நலனில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என விமர்சித்துள்ள நிர்மலா சீதாராமன், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதனை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது தான் உண்மையான உணவு இறையாண்மை ஏற்படும் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் முதலமைச்சர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சித்துள்ளார்.

தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும், மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே திமுகவின் நோக்கம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Post

TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

Posted by - April 15, 2026 0
அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில்…

கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

Posted by - March 8, 2026 0
தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.…

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - January 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *