பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

202 0

திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சில இடங்களில் சில வினோதமான திருட்டுகள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண்களின் உள்ளாடைகள்:

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியில் காயப்போடும் துணிகள் மாயமாகி வந்தது. குறிப்பாக, பெண்கள் அணியும் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களை உள்ளாடைகள் மட்டும் மாயம் ஆவது எப்படி? என்று அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியில் துவைத்து காயப்போட்டிருக்கும் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.

சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்:

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் , உள்ளாடைகளை திருடியவர் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாணப்பன் என்று தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 52 வயதான அவர் வீடு,வீடாகச் சென்று பல பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எதற்காக உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? என்று விசாரணை நடத்தினர்.

52 வயதான தனியார் நிறுவன  வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது போலீசார் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - November 14, 2023 0
சென்னை: இன்று உலக சர்க்கரை வியாதி தினம். சர்க்கரை வியாதியை பொறுத்தவரை நாள்பட்ட நோய். இது வந்தாலே வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரையோடுதான் வாழ வேண்டிய சூழ்நிலை. இந்த…

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Posted by - January 19, 2024 0
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைபடுத்தியதாக கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

மன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்

Posted by - December 29, 2023 0
சென்னை: விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு…

தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

Posted by - November 2, 2023 0
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *