காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

238 0

காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்து வந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,

பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ்  இளங்கோவன், ஆக்டிவாக செயல்பட்டபோது தமிழக அரசியலில் தீவிரமாக களமாடினார். அவரது அனல் பறக்கும் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் உயிரிழந்ததால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட்டு எம்.எல்.ஏ-ஆன ஈவிகேஸ் இளங்கோவனின் உடல்நிலையும் மோசமடைந்து இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?

ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்த இவர், சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். 1984,1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், 1996ல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ஈவிகேஎஸ்  இளங்கோவனின் முதல் வெற்றி:

004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு (214477) வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.

இருப்பினும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கூட்டணியில் இருந்த திமுக உடன் இணக்கமான உறவை கொண்டிருக்காததே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. தொடர்ந்து,  2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியையே தழுவினார்.

மகன் இடத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதன் பிறகு 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதையடுத்து காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் களமிறங்கி அபார வெற்றி பெற்றார்.

Related Post

தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..

Posted by - November 21, 2022 0
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…
Generated Image January 13 2026 11 08AM

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

Posted by - January 13, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழகத்​தில் கடந்த…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

Posted by - January 20, 2025 0
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *