பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

227 0

திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சில இடங்களில் சில வினோதமான திருட்டுகள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண்களின் உள்ளாடைகள்:

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியில் காயப்போடும் துணிகள் மாயமாகி வந்தது. குறிப்பாக, பெண்கள் அணியும் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களை உள்ளாடைகள் மட்டும் மாயம் ஆவது எப்படி? என்று அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியில் துவைத்து காயப்போட்டிருக்கும் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.

சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்:

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் , உள்ளாடைகளை திருடியவர் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாணப்பன் என்று தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 52 வயதான அவர் வீடு,வீடாகச் சென்று பல பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எதற்காக உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? என்று விசாரணை நடத்தினர்.

52 வயதான தனியார் நிறுவன  வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது போலீசார் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Posted by - August 16, 2023 0
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்)…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை – நடிகர் அஜித் உருக்கம்!

Posted by - January 14, 2025 0
“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது”…

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *