பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

203 0

திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சில இடங்களில் சில வினோதமான திருட்டுகள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண்களின் உள்ளாடைகள்:

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியில் காயப்போடும் துணிகள் மாயமாகி வந்தது. குறிப்பாக, பெண்கள் அணியும் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களை உள்ளாடைகள் மட்டும் மாயம் ஆவது எப்படி? என்று அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியில் துவைத்து காயப்போட்டிருக்கும் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.

சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்:

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் , உள்ளாடைகளை திருடியவர் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாணப்பன் என்று தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 52 வயதான அவர் வீடு,வீடாகச் சென்று பல பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எதற்காக உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? என்று விசாரணை நடத்தினர்.

52 வயதான தனியார் நிறுவன  வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது போலீசார் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - January 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *