பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

201 0

திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சில இடங்களில் சில வினோதமான திருட்டுகள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண்களின் உள்ளாடைகள்:

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியில் காயப்போடும் துணிகள் மாயமாகி வந்தது. குறிப்பாக, பெண்கள் அணியும் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களை உள்ளாடைகள் மட்டும் மாயம் ஆவது எப்படி? என்று அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியில் துவைத்து காயப்போட்டிருக்கும் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.

சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்:

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் , உள்ளாடைகளை திருடியவர் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாணப்பன் என்று தெரியவந்தது.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 52 வயதான அவர் வீடு,வீடாகச் சென்று பல பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எதற்காக உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? என்று விசாரணை நடத்தினர்.

52 வயதான தனியார் நிறுவன  வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது போலீசார் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted by - January 25, 2023 0
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி…

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - August 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *