பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

86 0

பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 11-வது நாளாக ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், ஆசிரியர்கள் பலர் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் மாற்று ஏற்பாடுகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஏற்பாடு செய்திருந்தன. எனினும், சில பகுதிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நேற்று டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கையை உரிய ஆதாரங்களுடன் எடுத்து முன்வைத்தோம். அதற்கு டெல்லி சென்றுள்ள துறையின் செயலர் சந்திரமோகன் சென்னை திரும்பியதும் அவருடன் கலந்து பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை அமைதியான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். காவல் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அதேநேரம், கோரிக்கை நிறைவேறும் வரை களத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. எங்கள் ஊதிய முரண்பாடு பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறோம். நாங்கள் விடுமுறையில் மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இந்த முறை பள்ளிகள் திறக்கப்பட்டும் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலைக்காக மாணவர்கள், பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி முழு வீச்சில் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Posted by - January 26, 2024 0
அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ! சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில்…

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

சர்க்கரை நோயால் உங்க உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க… ‘இந்த’ 6 விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்!

Posted by - November 18, 2023 0
உலகளவில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது சர்க்கரை நோய். இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயால்…

விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - December 10, 2024 0
இதக்கூட கவனிக்க மாட்டிங்களா என்று உளவுத்துறை தலைமையை அழைத்த ஸ்டாலின் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் விவகாரத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *