மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

288 0

சென்னை:

மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா?

2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் மீன் + முட்டை.

மீனுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாதாம்.. ஒன்றன் பின் ஒன்றாகவும் சாப்பிடக்கூடாதாம்.. இரண்டுமே புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால், புரத ஒவ்வாமையை இவைகள் ஏற்படுத்திவிடுவதுடன், தோல் வெடிப்புகளையும் தந்துவிடும். அதனால்தான், மீன், முட்டையை ஒருசேர சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள். மீன், கருவாடு இதில் எது சாப்பிட்டாலும், பால், தயிர் சாப்பிடக்கூடாது.மீனுடன் "இதை" சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்..  கீரை + தயிர் = விஷம் | Do you know the Excellent Health Benefits of Fish  and Can we Eat Fish with ...

கீரைகள்:

தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு நிறையவே உண்டு.. சத்துக்கள் அதிகம் நிறைந்த மீன்களுடன், தயிரை சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள். அதேபோல, மீன்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்..

இவைகளை ஒன்றாக சாப்பிட்டால், சளி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளை தந்துவிடும்.. அதேபோல, திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், குடல் பாதிப்பு வந்துவிடும்.. அதனால், மீன் பொறித்த எண்ணெய்கூட, திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.

எதிரெதிர் விளைவு:

ஒரே குணங்களை கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடுவதைபோல, எதிரெதிர் குணங்களை கொண்ட உணவுப்பொருட்களையும் நாம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதற்கு சரியான உதாரணம், பிரியாணியில் நாம் சாப்பிடும் தயிர் வெங்காய பச்சடிகள்தான்.. இந்த பச்சடியை தவிர்க்க சொல்கிறார்கள். காரணம், தயிரை பொறுத்தவரை குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது..

வாழைப்பழம்:

அதனால்தான், அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், தயிரோடு மட்டும் கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதேபோல, வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது… வாழைப்பழம் சாப்பிட்டதுமே, தயிர், மோர் சாப்பிடக்கூடாது. தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிடக்கூடாது. வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

தவிர்க்கலாம்:

ஒருமுறை, பிரபல ஆயுர்வேத டாக்டர். ரேச்சேல் ரெபெக்கா ஒரு பேட்டியில் சொன்னபோது, “அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே, நமக்கு ஆரோக்கியம் நிச்சயம்.. மீனுடன் தயிருடன் சாப்பிடக்கூடாது.. நல்லெண்ணெய்யில் இறைச்சியில் சமைக்கக்கூடாது.. நாம் சாப்பிட்டதுமே தூங்கக்கூடாது.. உஷ்ணமான உணவை சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது.

உருளைக்கிழங்கு:

நமக்கு பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமே அஜீரணம்தான்.. அதனால், உளுந்து, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தயிர், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே போதும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணம் நமக்கு எளிதாகிவிட்டாலே, நோய்கள் அண்டாது” என்கிறார்.

Related Post

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

Posted by - May 28, 2025 0
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - December 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *