அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

178 0

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி தான் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு:

ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.  ஞானசேகரனுக்கு கருணை காட்டக்கூடாது எனவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஞானசேகரனுக்கான நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது நண்பருடன் இருந்த, 19 வயது பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவுகள் 63(a), 64(1), 75(i)(ii), மற்றும் 75(i)(iii) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, கோட்டூர்புரத்தில் வசிக்கும் ஞானசேகரன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி, அவரது வீடியோக்களைப் பதிவு செய்து, அவரது அடையாள அட்டையின் புகைப்படங்களை எடுத்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வரலாற்று குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது. இதுபோக அவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் அடுத்தடுத்த வழக்குகளில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்:

பெண்ணிடம் அத்துமீறி நடந்தபோது ஞானசேகரன் தொலைபேசி வாயிலாக யாரையோ தொடர்புகொண்டு, ”சார்” என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரனை தவிர மற்ற யாருக்குமே சம்மந்தம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக அரசு யாரையோ காப்பாற்ற முயல்கிறது என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடின. திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதகாவும் குற்றம்சாட்டின. இந்நிலையில் தான், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related Post

தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

Posted by - April 12, 2023 0
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. சித்திரை மாத முதல் நாளை உலகத்…

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

Posted by - February 12, 2024 0
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

Posted by - December 8, 2023 0
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *