ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

362 0

அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.Aishwarya Rajesh - ராஷ்மிகாவை அப்படி சொன்னேனா?.. ஜெர்க் ஆகி விளக்கம்  கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh Explains About Rashmika Mandanna  Issue - Tamil Filmibeat

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது, “அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது.ராஷ்மிகா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்திருப்பேன்" - ஐஸ்வர்யா  ராஜேஷ் | nakkheeran

இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

பெரிய உசுரு போக போகுது.. சக்திக்கு என்னாச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

Posted by - November 13, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மை பெண்கள் எல்லோருக்கும் தெரியவந்துவிட்ட நிலையில் கதை இனி எப்படி நகர போகிறது என ரசிகர்கள்…

சன் டிவியை முந்தியதா விஜய் டிவி?

Posted by - February 10, 2024 0
சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் ரசிகர்களை கவர போட்டிபோட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர். தற்போது…

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

“தாமரை” மலர் பானம்…சூரியனால் ஏற்படும் தலைவலியை கட்டுபடுத்துகிறது…

Posted by - April 18, 2024 0
இப்போது தாமரை மலர்களின் பலனைப் பெற இதை பயன்படுத்தும் முறை குறித்து  இங்கு காணலாம்.. தண்ணீர் – 1 கிளாஸ் தாமரை மலர்கள் – 3 செய்முறை:…

சிறையில் இருந்து வந்த கணவர்.. நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

Posted by - October 10, 2023 0
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *