ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

234 0

உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய  அணி அபார வெற்றி:

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றின் நேற்றைய போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற எதிரணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினர். இறுதிகட்டத்தில் பட்டாசாய் வெடித்த ஜெமிமா, 76 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 340 ரன்களை குவித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. மழையும் குறுக்கிட்டதால் போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இலக்கு 325 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ப்ரூக் ஹாலிடே, இஸ்ஸி கேஸ் மற்றும் அமிலியா கேர் ஆகியோர் அரைசதம் விளாசினாலும், 44 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஃபைனலி.. அரையிறுதியில் இந்தியா

உள்ளூரில் நடைபெறும் உலக்க கோப்பை என்பதால், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தனது முதல் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ஆனால், லீக் சுற்றிலேயே அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வி கண்டு, அரையிறுதிக்கு நுழையுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதின் மூலம், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்களும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அரையிறுதியில் இந்தியா யாரை எதிர்கொள்ளும்?

புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 11 புள்ளிகளுடனும், தென்னாப்ரிக்கா அணி 10 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி 9 புள்ளிகளுடனும் மற்றும் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 8 அணிகளுக்கும் மீதமுள்ள லீக் சுற்றில் தலா ஒரு போட்டி மட்டுமே உள்ளது. இந்திய அணி தனது கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றாலும் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து, முதலிடத்தில் இருக்கும் அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டி உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் நாளை மோத உள்ளன. அந்த போட்டியின் முடிவிலேயே, இந்தியா அரையிறுதியில் யாரை எதிர்கொள்ள நேரிடும் என்பது உறுதி செய்யப்படும். தென்னாப்ரிக்கா அணி வெற்றியை பதிவு செய்தால், முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி நாளை தோற்று, நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பிரமாண்ட வெற்றியை பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். ஆனால், தற்போதைய சூழலில் அரையிறுதியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதவே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவிற்கான அரையிறுதி போட்டி எப்போது?

இந்திய அணிக்கு நான்காவது இடம் உறுதி என்பதால், வரும் 29ம் தேதி கவுகாதியில் உள்ள பர்ஸபரா மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போடிட்யில் களமிறங்க உள்ளது. அதிலும், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஒரு தோல்வியை கூட கண்டிராத ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது. லீக் சுற்றில் கண்ட தோல்விக்கு பழி வாங்கி இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

Generated Image February 16 2026 10 25AM

பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

Posted by - February 16, 2026 0
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது. IND vs PAK…

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

Posted by - May 1, 2023 0
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப்…

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

Posted by - April 20, 2023 0
அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின்…
Gemini Generated Image envwkhenvwkhenvw

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

Posted by - March 31, 2026 0
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். நடப்பு…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *