சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

252 0

அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின் உள் விவகாரங்கள், வியூகங்கள் குறித்து பெங்களுர் அணியின் பவுலர் முகமது சிராஜிடம் கேட்டதாக, பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவிடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், தான் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததால், முகமது சிராஜை வாட்ஸாப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த மெசேஜ்ஜில் அவர், தான் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் இந்திய அணியின் விவகாரங்களை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மெசேஜ் வந்ததையடுத்து, முகமது சிராஜ் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழுவினரிடம் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, பிசிசிஐ சைபர் போலிசாரின் உதவியை நாடியது. அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், பணத்தை மீட்க சிராஜிடம் உதவி கோரியதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் எந்த எந்த கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பதும், அவர் மீது கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுகள் இல்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - April 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

Posted by - September 15, 2025 0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது…
Generated Image November 12 2025 10 03AM

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

தோனி மீது பதிவான 10 புகார்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்… காரணம் இதுதான்…!

Posted by - May 18, 2023 0
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. விளம்பர விதிமுறைகளை மீறியதாக தோனி…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *