எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

292 0

டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர்.

இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் சாத்தியமாகியுள்ளதாக சொல்கின்றனர். டெல்லியில் நடந்த இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் கூட்டணி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலையுடன் இபிஎஸ்-க்கு இருக்கும் மோதலை கணக்கில் வைத்து டெல்லி பாஜக தலைமை அதனை சரிகட்ட ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

இறங்கி வந்த இபிஎஸ்

அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்ட நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லிக்கு சென்று சந்தித்தது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று விடாப்பிடியாக இருந்த இபிஎஸ் தற்போது இறங்கி வந்துள்ளார். அண்ணாமலையால் கூட்டணி கெட்டு விடக் கூடாது என்பதால், பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி அவருடன் சைலண்ட் மோடுக்கு சென்றார். அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பதில் அதிமுக கூட்டணியை மையமாக வைத்தே வானதி, நயினார் உள்ளிட்டோர் அண்ணாமலையுடன் ரேஸில் இருந்தனர்.

அதுவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதே இபிஎஸ் யோசித்து வந்ததற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 2 பேரும் எங்கள் கூட்டணியில் தான் இருப்பார்கள் என்பதை அண்ணாமலை தெளிவாக சொல்லிவிட்டார். பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பத்தில் ஆரம்பம் முதலே தலையிட்டு வரும் அமித்ஷா, அதனை சாத்தியப்படுத்திவிட்டுதான் கூட்டணியை அமைக்கிறாரா? என்ற கேள்வி வந்தது.

முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்

ஆனால் அதற்கெல்லாம் இபிஎஸ் ஒத்துக் கொள்வதாக இல்லை என சொல்கின்றனர். அதனால் டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் என்பதை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே தொடர வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.

ஆனால் இபிஎஸ்- அண்ணாமலை இடையே மோதல் இருப்பதால் கூட்டணிக்குள் பூகம்பம் வெடிக்க கூடாது என்பதற்காக, கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை டீல் செய்வதற்காக தனியாக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த குழு அமையவிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே அதிமுகவினருடன் நெருக்கமான உறவில் இருப்பதால் தேவையற்ற வார்த்தை மோதலை தடுக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது

அதேபோல் ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது என்ற கண்டிஷனுடன்தான் இபிஎஸ் கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. பாஜக தலைமையிடம் இருந்தும் அதற்கு க்ரீன் சிக்னலே வந்துள்ளது. இருந்தாலும் ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதி பங்கீடு, ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றில் சுமூகமாக முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வி வந்துள்ளது.

Related Post

ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

Posted by - July 1, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு… உடனே Delete பண்ணுங்க

Posted by - December 31, 2024 0
SBI ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், வாட்ஸாப் லிங் கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்…

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்: பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்

Posted by - February 17, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *