எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

304 0

டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர்.

இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் சாத்தியமாகியுள்ளதாக சொல்கின்றனர். டெல்லியில் நடந்த இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் கூட்டணி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலையுடன் இபிஎஸ்-க்கு இருக்கும் மோதலை கணக்கில் வைத்து டெல்லி பாஜக தலைமை அதனை சரிகட்ட ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

இறங்கி வந்த இபிஎஸ்

அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்ட நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லிக்கு சென்று சந்தித்தது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று விடாப்பிடியாக இருந்த இபிஎஸ் தற்போது இறங்கி வந்துள்ளார். அண்ணாமலையால் கூட்டணி கெட்டு விடக் கூடாது என்பதால், பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி அவருடன் சைலண்ட் மோடுக்கு சென்றார். அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பதில் அதிமுக கூட்டணியை மையமாக வைத்தே வானதி, நயினார் உள்ளிட்டோர் அண்ணாமலையுடன் ரேஸில் இருந்தனர்.

அதுவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதே இபிஎஸ் யோசித்து வந்ததற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 2 பேரும் எங்கள் கூட்டணியில் தான் இருப்பார்கள் என்பதை அண்ணாமலை தெளிவாக சொல்லிவிட்டார். பிரிந்து சென்ற அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பத்தில் ஆரம்பம் முதலே தலையிட்டு வரும் அமித்ஷா, அதனை சாத்தியப்படுத்திவிட்டுதான் கூட்டணியை அமைக்கிறாரா? என்ற கேள்வி வந்தது.

முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்

ஆனால் அதற்கெல்லாம் இபிஎஸ் ஒத்துக் கொள்வதாக இல்லை என சொல்கின்றனர். அதனால் டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் என்பதை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே தொடர வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.

ஆனால் இபிஎஸ்- அண்ணாமலை இடையே மோதல் இருப்பதால் கூட்டணிக்குள் பூகம்பம் வெடிக்க கூடாது என்பதற்காக, கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை டீல் செய்வதற்காக தனியாக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளனர். வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த குழு அமையவிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே அதிமுகவினருடன் நெருக்கமான உறவில் இருப்பதால் தேவையற்ற வார்த்தை மோதலை தடுக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது

அதேபோல் ஓபிஎஸ், டிடிவி-யுடன் இணைய முடியாது என்ற கண்டிஷனுடன்தான் இபிஎஸ் கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. பாஜக தலைமையிடம் இருந்தும் அதற்கு க்ரீன் சிக்னலே வந்துள்ளது. இருந்தாலும் ஓபிஎஸ்-ம், டிடிவியும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதி பங்கீடு, ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றில் சுமூகமாக முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வி வந்துள்ளது.

Related Post

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! “கொரோனா” முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

Posted by - September 30, 2023 0
டெல்லி: இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத்…

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…
Generated Image November 06 2025 11 11AM

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

Posted by - November 6, 2025 0
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ்…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

Posted by - July 25, 2023 0
டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *