தளபதிக்கு “தல” கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!

190 0

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணி துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதன்முறையாக பங்கேற்ற இந்த பந்தயத்திலே 3வது இடம் பிடித்து அசாத்தியமான சாதனையை அஜித்குமார் அணி படைத்துள்ளது. இந்த வெற்றியைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த அஜித்குமாருக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்:

துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மாதவன், அர்ஜுன், சமந்தா என பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தாலும் நடிகர் விஜய் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் இருந்தது. ஆனால், நடிகர் விஜய் அஜித்திற்கு தற்போது வரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லை. அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து அஜித்திற்கு எந்தவொரு வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.

நீங்க எப்போ வாழப்போறீங்க?

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் என்ற பக்கத்தில் இருந்து மட்டும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பக்கம் தவெக-வின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. அரசியல் களத்தில் விஜய் கால்தடம் பதித்துள்ள நிலையில், சக போட்டியாளராக இருந்தாலும் தனக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித்திற்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் விஜய் நடிகர் அஜித்திற்கு தொலைபேசி வாயிலாக ஏதேனும் வாழ்த்து தெரிவித்தாரா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாவில்லை.

துபாய் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் அளித்த பேட்டியில், விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. என்று கூறிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போ வாழப் போறீங்க? என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.  அஜித்தின் இந்த அறிவுரை இணையத்தில் வைரலாகியது. அஜித்தின் இந்த அறிவுரை விஜய்க்கு ஏதும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சக நடிகர்களின் ரசிகர்கள் வாக்குகள்:

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக உள்ளனர். ஆனால், இருவரும் குடும்ப நண்பர்களாக உள்ளனர். அரசியல் களத்தில் புகுந்துள்ள நடிகர் விஜய்க்கு சக நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகளும் மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனாலும், இணையத்தில் நடக்கும் சில ஆரோக்கியமற்ற மோதல்கள் அவரது வாக்கு சதவீதத்தைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related Post

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

Posted by - September 27, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

Posted by - November 16, 2024 0
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது. நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில்…

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

Posted by - May 28, 2023 0
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *