கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

289 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது.

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுவனொருவரின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வேறொரு சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.successful heart transplant surgery at Sri Padmavathi children's heart  center | திருப்பதியில் ஐந்தரை வயது சிறுமிக்கு வெற்றிகரமாக இதய மாற்று  சிகிச்சை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அங்கு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை நேற்று மாலை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.successful heart transplant surgery at Sri Padmavathi children's heart  center | திருப்பதியில் ஐந்தரை வயது சிறுமிக்கு வெற்றிகரமாக இதய மாற்று  சிகிச்சை

பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இதயத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு பொறுத்தினர் மருத்துவர்கள்.

இதயத்தை கொண்டு சென்றபோது மழையும் வந்துவிட்டதால், மருத்துவ பணியாளர்களுக்கு அவ்விடத்தில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக கொட்டும் மழையில் ஓடோடி வந்து இதயத்தை மருத்துவர்கள் வசம் அவர்கள் ஒப்படைத்தனர்.

இக்காட்சிகள், அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது. அச்சிறுமி, தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள திருப்பதி மாவட்டம் தடா மண்டலம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமியென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. ஜனாதிபதி உரை

Posted by - January 31, 2023 0
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பாராளுமன்றத்தில்…

TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் – யார் எழுதியது.?

Posted by - July 29, 2025 0
டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை படிப்படியாக வேலையை விட்டு நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு கடிதம்…

வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

Posted by - December 10, 2022 0
ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ…

சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *