paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

255 0

3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில் செயல்படுத்தக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.டிஜிட்டல் மயமாக்கலுக்கு நடுவே UPI மூலம் டிஜிட்டல் முறையில் பேமெண்ட்ஸ் செய்வது மக்களிடையே மிகவும் பொதுவான பழக்கமாக மாறி விட்டது. கடந்த அக்டோபரில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 7.7% உயர்ந்து 730 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த ரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.12.11 லட்சம் கோடிக்கும் அதிகம். கடந்த செப்டம்பரில் 678 கோடி எண்ணிக்கையிலான UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ11.16 லட்சம் கோடி ஆகும்.இந்நிலையில் தற்போது UPI பரிவர்த்தனைகள், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட எந்த UPI அடிப்படையிலான ஆப்ஸ்களிலும் பரிவர்த்தனைகளுக்கு வால்யூம் கேப் இல்லை. இந்நிலையில் தான் UPI டிஜிட்டல் சிஸ்டமிற்கு பொறுப்பான NPCI, தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் லிமிட்டை கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட காலக்கெடுவை செயல்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Related Post

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

Posted by - August 11, 2023 0
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *