ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

214 0

நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிபுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் நீட் விலக்கு வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தியது.

2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது. பின்னர் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது திமுக அரசு. அது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்றட்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்துவிடவில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து சட்டம்னற கட்சி தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனை கூட்டம் வரும் 9ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும்” என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயல்கத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 11 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அதிமுக, பாஜக பங்கேற்காது என தெரிகிறது.

 

Related Post

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *