”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

174 0

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

நிறைவேற்றப்படாத மசோதாக்கள்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  மனுவில், “ 2020 முதல் 2023 வரை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர், 10 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். அவற்றை மறுபரிசீலனை செய்த சட்டமன்றம், மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இரண்டாவது முறை தமது ஒப்புதலுக்கு அனுப்ப்பட்ட மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவற்றையும் அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்” என குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

ஆளுநரின் நடவடிக்கையில் நேர்மை இல்லை” – உச்சநீதிமன்றம்

வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், “பொதுவான விதியின்படி  மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம். இரண்டாவது முறையாக நிரைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். அந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதங்களிலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

ஒப்புதல் கிடைத்த மசோதாக்கள்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவற்றிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமன அதிகாரம்:

மேற்கண்டவற்றில் திமுக ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இந்த மசோதாவானது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அரசுக்கே கிடைக்க வழிவகை செய்கிறது. ஏற்கனவே குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார். அதேபாணியில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை மசோதா வழங்குகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் கொடுத்துள்ளதால், விரைவிலேயே இந்த மசோதா சட்டமாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

Posted by - April 20, 2023 0
guru peyarchi 2023 date : சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி…

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

Posted by - March 14, 2023 0
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம்…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - December 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…

கொள்ளை பணத்தில் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்- கோவை மருதமலையில் சிக்கினர்

Posted by - August 7, 2023 0
கோவை: கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *