”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

191 0

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

நிறைவேற்றப்படாத மசோதாக்கள்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  மனுவில், “ 2020 முதல் 2023 வரை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர், 10 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். அவற்றை மறுபரிசீலனை செய்த சட்டமன்றம், மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இரண்டாவது முறை தமது ஒப்புதலுக்கு அனுப்ப்பட்ட மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவற்றையும் அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்” என குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

ஆளுநரின் நடவடிக்கையில் நேர்மை இல்லை” – உச்சநீதிமன்றம்

வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், “பொதுவான விதியின்படி  மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம். இரண்டாவது முறையாக நிரைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். அந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதங்களிலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

ஒப்புதல் கிடைத்த மசோதாக்கள்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவற்றிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமன அதிகாரம்:

மேற்கண்டவற்றில் திமுக ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இந்த மசோதாவானது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அரசுக்கே கிடைக்க வழிவகை செய்கிறது. ஏற்கனவே குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார். அதேபாணியில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை மசோதா வழங்குகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் கொடுத்துள்ளதால், விரைவிலேயே இந்த மசோதா சட்டமாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் Smoke Biscuit?? அதிரடி உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை

Posted by - April 25, 2024 0
ஸ்மோக் பிஸ்கட்களை, குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை சிறுவன் ஒருவர் உட்கொண்டு துடிதுடித்த…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *