ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

115 0

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்

அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  அகவிலைப்படி  55% இலிருந்து 58% ஆக உயர்வு, அரசு ஊழியர்கள் இலவச காப்பீட்டுத் திட்டம், கடன் உதவி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஈட்டிய சரண் விடுப்பை  நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசு மீண்டும் ஈட்டிய சரண் விடுப்பு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

ஈட்டிய சரண் விடுப்பு நிறுத்தம்

இந்த நிலையில் கடந்த 2020 எப்ரல் 25-ஆம் தேதி அதற்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவல் காலகட்டத்தில், நாடே முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டமாக  27.4.2020 முதல் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் தமிழக அரசு நிறுத்தியது. இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஈட்டிய சரண் விடுப்பு- அரசாணை வெளியீடு

இதனையடுத்து அரசு ஊழியர்கள் எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதியில் இருந்தும் பணப்பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

 யாருக்கெல்லாம் சரண் விடுப்பு பணப்பலன் கிடைக்கும்

இதே போல ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 எப்ரல் 1ம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும்  குறிப்பிட்ட காலக்கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஆட்சி மாற்றம் ஏற்படும்… தங்கம் விலை உச்சத்தை தொடும்… புதிய நோய் பரவும்… பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்,….

Posted by - April 15, 2025 0
மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும்…

முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

Posted by - December 20, 2023 0
சென்னை: பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம். முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு…

5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!கண்டுகொள்ளாத தமிழக அரசு…

Posted by - December 30, 2025 0
சம வேலைக்கு சம ஊதியம் கோரி எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு 5-ஆவது நாளாகப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள்.. சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *