ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

135 0

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்

அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  அகவிலைப்படி  55% இலிருந்து 58% ஆக உயர்வு, அரசு ஊழியர்கள் இலவச காப்பீட்டுத் திட்டம், கடன் உதவி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஈட்டிய சரண் விடுப்பை  நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசு மீண்டும் ஈட்டிய சரண் விடுப்பு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

ஈட்டிய சரண் விடுப்பு நிறுத்தம்

இந்த நிலையில் கடந்த 2020 எப்ரல் 25-ஆம் தேதி அதற்கு முன்பு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவல் காலகட்டத்தில், நாடே முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டமாக  27.4.2020 முதல் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் தமிழக அரசு நிறுத்தியது. இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஈட்டிய சரண் விடுப்பு- அரசாணை வெளியீடு

இதனையடுத்து அரசு ஊழியர்கள் எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதியில் இருந்தும் பணப்பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

 யாருக்கெல்லாம் சரண் விடுப்பு பணப்பலன் கிடைக்கும்

இதே போல ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தவர்கள் 2026 எப்ரல் 1ம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும்  குறிப்பிட்ட காலக்கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்

Posted by - July 4, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…
Generated Image February 05 2026 12 17PM

காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா?

Posted by - February 5, 2026 0
சென்னையில் காகங்கள் உயிரிழந்ததற்கு பறவைக்காய்ச்சலே காரணம் என்று ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சென்னையில் கடந்த மாதம் 5ம் தேதி…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *