உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

230 0

இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பணம் முறைகேடு செய்த கல்லால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. லைக்கா நிறுவனம் தனது புகார் மனுவில் 114.27 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கல்லால் குழுமம்  மோசடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆனால், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் மோசடி பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடியாக இருக்கும் என்று தெரியவந்தது.

மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் (Suspicious Cash and Hawala Transaction) கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக  கடந்த 25.05.2023 அன்று, குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடங்கியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் ரூபாய்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.விசாரணையின் போது, கல்லால் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Post

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Posted by - September 12, 2025 0
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய…

கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

Posted by - December 8, 2023 0
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி

Posted by - August 29, 2023 0
தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு…

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - April 21, 2023 0
ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *