“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?

216 0

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தியுள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு முக்கிய முடிவாலேயே இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தங்களின் ஒரு முக்கிய முடிவாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக தெரிவித்துள்ளார். அந்த முடிவு என்ன.? பார்க்கலாம்.

ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று அசத்திய நிலையில், இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனையும், நட்சத்திர ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா, இந்த வெற்றி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த வெற்றிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், இந்த வெற்றியை தன்னுள் இன்னும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை என கூறியுள்ளார். பொதுவாக தான் கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிவசப் பட்டதில்லை என்றம், ஆனால் இந்த வெற்றி நிஜமாகவே ஒரு மிகவும் நம்ப முடியாத ஒரு தருணமாக தனக்கு இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் தாங்கள் விளையாட சென்றபோதும், தங்கள் அனைவருக்குமே எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டதாகவும், பல சமயங்களில் இதயம் நொறுங்கியுள்ளதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.

மேலும், கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியதாகவும், அந்த அனுபவங்களை உறுதியாக மாற்றிக்கொண்டு, தங்கள் அனைவரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கடுமையாக உழைத்ததாகவும், இந்த ஒரு இரவிற்காக 45 நாட்கள் தாங்கள் தூங்காமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முக்கியமான ஒரு முடிவை எடுத்தோம்“

அதோடு, கடந்த உலகக் கோப்பை தங்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய ஸ்மிருதி மந்தனா, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினார். அந்த தோல்விக்குப் பிறகுதான் தாங்கள் அனைவரும் ஒரு குறிக்கோளோடு இருந்ததாகவும், ஒரு முக்கிய முடிவை அந்த தருணத்தில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, அனைவருமே உடல் தகுதியை அதிகரித்து, பலமான வீராங்கனைகளாக மாறுவது என்றும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீராங்கனைகளாக இருப்பது என்ற முடிவுவை எடுத்து உழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணியின் வெற்றி என்பதைத் தாண்டி, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக நம்புவதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக தாங்கள் பெற்ற ஆதரவை காணும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.

52 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி

நவி மும்பையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்யில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் ஒருபுறம் நிலைத்து ஆடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .ஆனால், மறுமுனையில் மற்ற வீராங்கனைகள் தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 45.3 ஓவர்களில், 246 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.

இதையடுத்து இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Related Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - December 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை…

Posted by - May 28, 2023 0
ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில்…

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

Posted by - March 21, 2024 0
13 வருடங்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும்…

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *