எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

444 0

அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.

1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக 1978-ம் ஆண்டு வரை நீடித்தார். அவரையடுத்து, நெடுஞ்செழியன் 1980 வரை இப்பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியனை அடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ப.உ.சண்முகம், 4 ஆண்டுகள் 275 நாட்களும், ராகவானந்தம் ஓராண்டு 216 நாட்களும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்தனர்.

இவர்களை அடுத்து மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர், இறுதிக் காலம் வரை பொதுச் செயலாளராக இருந்தார். எம்ஜிஆர் இறப்புக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, அன்று முதல் அவர் இறக்கும் வரை 27 ஆண்டுகள் 300 நாட்களுக்கு அந்த பதவியில் தொடர்ந்தார்.

 

இவரை தொடர்ந்து, வி.கே.சசிகலா 2016 டிசம்பர் முதல் வெறும் 48 நாட்கள் மட்டுமே தற்காலிக பொதுச் செயலாளராக அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராகவும், அந்தப் பதவியை அலங்கரிக்கும் ஏழாவது தலைவராகவும் உருவெடுத்துள்ளார். தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடைய அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பல நாட்கள் கழித்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Related Post

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது – சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

Posted by - December 31, 2025 0
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை…

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *