கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

240 0

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு வீடுகளில் இந்த சம்பவம் நடந்தது.Murder under Indian Penal Code: All you need to know about it

கொலையுண்டவர்கள் அமரேந்திர தே மற்றும் அவரது தாயார் சங்கரி தே ஆவார்கள். அமரேந்திர தேயை காணவில்லை என்று அவரது மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார். அதேபோல் சங்கரி தேயை காணவில்லை என்று அவரது உறவினர் புகார் செய்தார்.

இதையடுத்து அமரேந்திர தேயின் மனைவிமீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தனது காதலன் மற்றும் குழந்தைப்பருவ நண்பருடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

அவர்களின் உடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் அடைத்துள்ளார். பின்னர் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஜான்மதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியுள்ளது.

Related Post

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *