கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

166 0

“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று 7 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது”

தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் வாரம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக, மழை சற்று குறைந்து இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை அதன் புறநகர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு என்ன ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற இடங்களில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நிலை இந்த மாதம் 11ஆம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவரம் என்ன ? Thiruvallur Weather Forecast Today

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற பகுதிகளில் வானம் மேகத் மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Post

தமிழ் புத்தாண்டு 2023… செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

Posted by - April 12, 2023 0
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது. சித்திரை மாத முதல் நாளை உலகத்…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *