இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

233 0

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் ஒன்பதாம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், மின்னல் மற்றும் பணப்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழை பதிவானது

Related Post

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…

பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

Posted by - December 4, 2024 0
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *