கரூர் துயரம்; உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தை நீக்க வேண்டும்… உச்ச நீதிமன்றத்தில் தவெக முறையீடு

156 0

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மனுவில் விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர் நீதிமன்ற கருத்துகளை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஏற்கெனவே திட்டமிட்ட வழியில் அல்லாமல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திய வழியில்தான் த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் வாகனம் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது.மேலும் சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது விஜய் மற்றும் நிர்வாகிகளுக்குத் தெரியாது எனவும், காவல் துறை தடியடி நடத்தியதால்தான் தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பிரச்னை ஏற்பட்டால் எந்நேரத்திலும் விஜய் மற்றும் நிர்வாகிகளின் வாகனத்தைத் திருப்பி அனுப்ப அதிகாரம் இருந்தும் காவல் துறை அப்படி எதையும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Post

அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்.. நீலகிரியில் பரபரப்பு

Posted by - March 25, 2024 0
நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில்…

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…

“நானும் முருக பக்தன்தான்” திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?

Posted by - June 19, 2025 0
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அழைப்பு குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமா பதில் அளித்துள்ளார். பள்ளிக்காலத்தில் தானும் முருகனை வழிபட்டு பக்தனாக…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

Posted by - October 11, 2025 0
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *