Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

134 0

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியதை இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “தயவு செய்து எங்கள் கட்சிக்கு யாரும் ஒட்டு போட வேண்டாம்.. உலகத்தில் முதல் முறையாக ஒரு கட்சி தலைவர் தன் கட்சி தொண்டர்களிடம் கெஞ்சி கோரிக்கை.. ஊரெல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ண கட்சி இன்று கர்மா அதையே அவர்களுக்கு திருப்பி தருகிறது. பாதிக்கப்பட்ட பெத்தவங்க பாவம் சும்மா விடுமா. Karma Is boomerang” என தெரிவித்துள்ளார். இதற்கு விசிக தொண்டர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

நடந்தது என்ன?

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் மிகுந்த சிக்கல் நீடித்தது.

இதனால் தனக்கு செல்வாக்கு உள்ள நான்கு தொகுதிகளில் தனித்து களம் காண்பதாக கூறி திருமாவளவன் வேட்பாளர்களை அறிவித்தார். இதற்கிடையில் திமுக – காங்கிரஸ் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்தக் கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் அதனை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடும் உழவர்களை தொகுதியில் மட்டும் விசிக தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே சமயம் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அவர்களுக்கு பதில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையை உழவர்கரை தொகுதியில் சார்பில் செல்வ புஷ்பலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு சுயேட்சை சின்னமான கரும்பலகை ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக் கொண்டது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image January 04 2026 7 00PM

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - January 4, 2026 0
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய்…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…
Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…
edapadi palanisamy

EPS Statement: “அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்“ இபிஎஸ் அறிக்கை

Posted by - May 5, 2026 0
TN Election Results 2026: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *