பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

305 0

சென்னை:

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. Read all Latest Updates on and about வடகிழக்கு பருவமழை

அதன் தொடர்ச்சியாக நேற்றும் சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் திரள் மேகக்கூட்டங்கள் ஒரு சேர வந்து குவியும் இடத்தில் மழை பெய்ததை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் சென்னை கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளிலும், எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பல இடங்கள் மழைநீர் சூழ காட்சி அளித்தன.

இந்நிலையில் மழை நிலவரங்களை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் பாதிப்பு விவரங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அழைப்புகள் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Post

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

Posted by - March 27, 2025 0
இடைநிலை ஆசிரியர் பணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

Posted by - January 19, 2023 0
Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *