காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

250 0

எப்போதும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? சற்று சத்தானதாகவும், வித்தியாசமானதாகவும், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறுமாறான ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புட்டு செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்யும் புட்டை செய்யாமல், சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பைக் கொண்டு புட்டு செய்யுங்கள். இந்த புட்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி  சாப்பிடுவாங்க.. | Moong Dhal Puttu Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 1 கப்

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அதில் அரைத்த மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து வேக வைத்த இட்லிகளை எடுத்து, ஓரளவு குளிர்ந்ததும், அவற்றை உதிர்த்து விட வேண்டும்.

* பிறகு உதிர்த்து விட்டதை அளந்து பார்க்க வேண்டும். ஒரு கப் புட்டு மாவிற்கு 1/2 கப் சர்க்கரை என்று சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நீரை ஊற்றி கம்பி பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் நெய்யை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு புட்டு தயார்.

Related Post

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…
mookuthi amman

மூக்குத்தி அம்மன் … எந்த சேனலில் வருகிறது பாருங்க

Posted by - June 9, 2026 0
மூக்குத்தி அம்மன் பெயரை சொன்னதும் எல்லோருக்கும் நயன்தாரா – ஆர்ஜே பாலாஜி நடித்த படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே பெயரில் தற்போது ஒரு புது…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

Posted by - June 13, 2023 0
ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்து இவரது நடிப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *