கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

183 0

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை எடுத்துக் கொள்ள திமுக  வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. கடந்த முறை பின்பற்றியதை போல் இந்த முறையும் செயல்படுத்த திமுக முயற்சிக்கும் நிலையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகள் முட்டி மோதுகின்றனர்.திமுக கூட்டணியில் இதுவரை கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு ‘நாமக்கல்’ தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி ‘இராமநாதபுரம்’ தொகுதியும் ஒதுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே தனித்தனியான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் கடந்த முறை போட்டியிட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறையும் அந்த 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.இம்முறை கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என கூறப்படுகிறது. அவ்வாறு கமல்ஹாசன் இணையும் பட்சத்தில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் ஒன்று கோயம்புத்தூர் தொகுதியாக இருக்கும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இம்முறை கோயம்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஇருப்பினும் மதுரை தொகுதியோடு மயிலாடுதுறை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க தயார் என திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடுதுறை தொகுதியை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வேறு தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துமா? என்பது விரைவில் தெரிய வரும்

Related Post

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Posted by - January 8, 2025 0
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு…

ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?: அதிகாரி விளக்கம்

Posted by - September 21, 2023 0
கோவை: நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…

பிறந்தது கார்த்திகை… அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!

Posted by - November 17, 2025 0
சிவபெருமான்,முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. காலை முதல் ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர். ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *