சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

158 0

தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான லட்​சுமணன் எம்​எல்​ஏ-வுக்​கும் இடை​யில் மீண்​டும் உரசல் ஆரம்​பித்​து​விட்​டது.

எஸ்​ஐஆரைக் கண்​டித்து இண்​டியா கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தி​லும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இது லட்​சுமணனின் மத்​திய மாவட்ட எல்​லைக்​குள் வந்​த​தால் இதற்​கான ஏற்​பாடு​களை அவரே முன்​னின்று கவனித்​தார்.இந்த நிலை​யில், ஆர்ப்​பாட்​டத்​துக்​காக அச்​சிடப்​பட்ட நோட்​டீஸில், கூட்​ட​ணிக் கட்​சி​யான விசிக-​வின் பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் எம்​.பி-​யின் பெயரை​யும் திமுக மாநில விவ​சாய தொழி​லா​ளர் அணி​யின் செய​லா​ளர் அன்​னியூர் சிவா எம்​எல்​ஏ-​வின் பெயரை​யும் சிறிய​தாக போட்டு அவர்​களை இருட்​டடிப்பு செய்​து​விட்​ட​தாக சிலர் சர்ச்​சையைக் கிளப்​பி​னார்​கள்.இதைக் கண்​டித்து சமூக வலை​தளத்​தில் விசிக-​வினர் தங்​களது எதிர்ப்​பு​களை பதிவு செய்​தனர். உடனடி​யாக இதில் தலை​யிட்ட பொன்​முடி உடனடி​யாக, லட்​சுமணனை தொடர்பு கொண்​டு, “கூட்​ட​ணி​யில் முக்​கிய கட்​சி​யாக உள்ள விசிக-​வின் பொதுச்​செய​லா​ள​ரான ரவிக்​கு​மாரை ஏன் முன்​னிலை​யில் போட​வில்​லை…

அன்​னியூர் சிவா​வின் பெயரை ஏன் வரவேற்​புரை​யில் போட​வில்​லை? உங்​களோடு இருக்​கி​றார் என்​ப​தற்​காக, முன்​னாள் எம்​எல்​ஏ-​வான புஷ்ப​ராஜுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறீர்​களா? அப்​படி​யா​னால் விசிக வாக்கு நமக்கு தேவை​யில்​லை​யா? தலை​மை​யில் இருந்து கேள்வி கேட்​டால் இதற்​கெல்​லாம் யார் பதில் சொல்​வது? நோட்​டீஸை இறுதி செய்​வதற்கு முன்​பாக மண்டல பொறுப்​பாள​ரான அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்​துக்கு அனுப்பி ஒப்​புதல் பெற்​றீர்​களா?” என கேள்வி மேல் கேள்வி​களைக் கேட்டு துளைத்து எடுத்​து​விட்​டா​ராம்.

இதையடுத்து அந்த நோட்​டீஸை அப்​படியே வைத்​து​விட்டு ரவிக்​கு​மார் மற்​றும் அன்​னியூர் சிவா​வின் பெயர்​களை பெரி​தாகப் போட்டு புதி​தாக இன்​னொரு நோட்​டீஸை அடித்து அதை விநி​யோகம் செய்​திருக்​கிறது லட்​சுமணன் தரப்​பு. எடுத்த பதவியை திரும்​பக் கொடுத்​து​விட்​டால் விழுப்​புரத்​தில் விவ​காரம் இருக்​காது என்று நினைத்தே பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச் செய​லா​ள​ராக்​கியது தி​முக. ஆனால்​, நடப்​பது என்​ன​வோ அதற்​கு நேர்​ மாறாகத்​தான்​ இருக்​கிறது.

Related Post

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Posted by - July 18, 2025 0
பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *